ENGLISH
Wednesday, January 20, 2021
News alambana - Tamil
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • உலகம்
  • அரசியல்
  • வணிகம்
    • ஆட்டோமொபைல்
  • வாழ்க்கை முறை
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • சமையல்
  • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • திரை செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • ஷாப்பிங்
No Result
View All Result
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • உலகம்
  • அரசியல்
  • வணிகம்
    • ஆட்டோமொபைல்
  • வாழ்க்கை முறை
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • சமையல்
  • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • திரை செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • ஷாப்பிங்
No Result
View All Result
News alambana - Tamil
No Result
View All Result
Home Tamilnadu

அமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து – 2 பேர் பலி

November 24, 2020
in Tamilnadu
0
அமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து – 2 பேர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


bredcrumb

World

oi-Jeyalakshmi C

|

Updated: Tuesday, November 24, 2020, 6:00 [IST]

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நகர சர்ச்சில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

சான் ஜோஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிறன்று மாலை வழக்கமான பிரார்த்தனைகள் முடிந்து தேவாலயம் காலியாக இருந்தது. அப்போது தேவாலயம் அமைந்துள்ள சாலையில் வாழ்ந்து வரும் வீடற்ற நபர்கள் சிலர் குளிரில் இருந்து தப்பிக்க தேவாலயத்துக்குள் சென்று அமர்ந்து கொண்டனர்.

San Jose California church stabbing leaves two dead

அப்போது மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் தேவாலயத்திற்குள் புகுந்தார். இதைப்பார்த்து தேவாலயத்துக்குள் இருந்த நபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன நடக்கிறது என அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர் அவர்களை கத்தியால் சரமாரியாக குத்த தொடங்கினார். இதனால் கூச்சல் குழப்பம் உருவானது. அச்சத்துடன் பலரும் ஓடத்தொடங்கினர்.

விடாமல் விரட்டிய அந்த நபர் சற்றும் ஈவிரக்கமின்றி ஒவ்வொருவரையும் ஓட ஓட துரத்திச் சென்று கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் தேவாலயம் அமைந்துள்ள பகுதியை சீல் வைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

முன்னின்று காய் நகர்த்தும் கேம் சேஞ்சர்.. வெளியுறவுத்துறை அமைச்சராகும் ஆண்டனி.. பிடன் பிளான்

தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு சான் ஜோஸ் நகரின் மேயர் சாம் லிக்கார்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த நபர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்? இந்த தாக்குதலின் பின்னணி என்ன? என்பன உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ள சான் ஜோஸ் நகர போலீசார் தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed





Source link

Previous Post

Andhaghaaram review. Andhaghaaram தமிழ் movie review, story, rating – IndiaGlitz.com

Next Post

COVID-யை போல வரலாற்றில் எந்த தடுப்பூசியும் வேகமாக உருவாக்கப்படவில்லை: WHO

Next Post
COVID-யை போல வரலாற்றில் எந்த தடுப்பூசியும் வேகமாக உருவாக்கப்படவில்லை: WHO

COVID-யை போல வரலாற்றில் எந்த தடுப்பூசியும் வேகமாக உருவாக்கப்படவில்லை: WHO

முன்னணி கட்டுரையாளர்களிடமிருந்து விளையாட்டு, வணிகம், பொழுதுபோக்கு, வலைப்பதிவுகள் மற்றும் கருத்துகள் பற்றிய இன்றைய நேரடி செய்திகளைப் படியுங்கள் tamil.newsalambana.com

Follow Us

Recent News

தடுப்பூசி விநியோகம்: பக்கத்து நாடுகளுக்கே முன்னுரிமை

தடுப்பூசி விநியோகம்: பக்கத்து நாடுகளுக்கே முன்னுரிமை

நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையிலேயே குடியிருப்புகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது: கிரெடாய் தமிழக பிரிவு திட்டவட்டம்

நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையிலேயே குடியிருப்புகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது: கிரெடாய் தமிழக பிரிவு திட்டவட்டம்

  • முகப்பு
  • விதிமுறைகள் & நிபந்தனை
  • தனியுரிமைக் கொள்கை
  • எங்களை தொடர்பு கொள்ள

© 2020 News Alambana - The latest India and world breaking news and headlines online on byNews Alambana.

No Result
View All Result
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • உலகம்
  • அரசியல்
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • வாழ்க்கை
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • சமையல்
  • பொழுதுபோக்கு
    • திரை செய்திகள்
    • விளையாட்டு
  • ஆட்டோமொபைல்
  • ஷாப்பிங்

© 2020 News Alambana - The latest India and world breaking news and headlines online on byNews Alambana.